தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவரது சமீபத்திய படம் ‘விடாமுயற்சி’, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது. அந்த படத்திற்காக மட்டும் அவருக்கு ரூ.105 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இப்போது அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையிடப்படுகிறது. நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனாலேயே, படம் தியேட்டரில் வெளியானதும் வசூலில் பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் குறித்த தகவல் ஒரு சர்ப்ரைஸாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக அஜித் ரூ.163 கோடி சம்பளமாக பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், இது இணையத்தில் பரவும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. உண்மைதான் என்றால், இது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சம்பளமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *