விஜய் தற்போது இயக்குநர் எச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் அரசியல் சாயல் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படம், விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிவடையுமென கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘தி கோட்’ படத்திற்கு வெளியீட்டு உரிமை பெற்றிருந்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இப்போது ‘ஜன நாயகன்’ படத்தையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திரையரங்க வட்டாரத்தில் இந்த படம் இன்னும் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *