
பான் இந்தியா படங்கள் தரமற்ற கலாச்சாரம் – இயக்குனர் செல்வராகவன் வலியுறுத்தல்!
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மயக்கம் என்ன’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் செல்வராகவன். தற்போது நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ள இவர், சமீபத்தில் ‘நீயா நானா’ கோபிநாத்தின் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பான் இந்தியா படங்களால் ஏற்பட்ட சினிமா மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தார்.
“பான் இந்தியா ஒரு வியாதி போல பரவி விட்டது!”
அவர் கூறியதாவது: “இந்த பான் இந்தியா என்று சொல்லப்படும் கல்சரால், கலைநயம் கொண்ட சினிமா எல்லாம் மங்கிவிட்டது. இன்று ஒரு படத்தை எல்லா மொழிகளிலும் ஓட வைக்க வேண்டும் என்பதற்காக, தரம் இல்லாத மாஸ் காட்சிகளால் நிரப்பி விடுகிறார்கள். பாடல்கள், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் — எல்லாம் சேர்த்தே படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.”
1000 கோடி போஸ்டர் போட்டால் தரமா?
செல்வராகவன் தொடர்ந்தும் கூறுகையில், “ஓரே 4 அல்லது 5 நாட்களில் ‘1000 கோடி வசூல்’ என்று போஸ்டர்கள் பதிக்கிறார்கள். உண்மையில் அந்த வசூல் எத்தனை? யாரும் கேட்கவே மாட்டார்கள். ஹீரோவை மகிழ்விப்பதற்காகவே இது எல்லாம் நடக்கிறது. இப்படியொரு சூழலில் தரமான சினிமா எங்கே?” என கேள்வி எழுப்பினார்.
“ரசனை செத்து போச்சு!”
அவர் ஏக்கம் கொண்டு கூறியதாவது: “மக்கள் சினிமாவை அனுபவிப்பது போல் இல்லை. எல்லாமே வேக உணவு மாதிரி ஆகிவிட்டது. ஒரு படம் சில நாட்கள் ஓடினால் போதும், பணம் வந்தால் அதுவே வெற்றி என நினைக்கிறார்கள். ஆனால் சினிமாவுக்கு உயிரும் உள்ளமும் இருக்கும். அந்த உணர்வு இன்று காணோம்.”
பான் இந்தியா காமர்ஷியல் கட்டுப்பாடு
பான் இந்தியா கனவுகள் chasing செய்வது தவறில்லை, ஆனால் அதன் பின்புலத்தில் கலைச்சொர்பு காற்றடிக்கின்றது என செல்வராகவன் வேதனை தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஒரு தமிழ் படம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழியிலும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, ஒரே மாதிரியான கதைகள் உருவாகின்றன. உண்மையான கலைப்பண்பும், கதையம்சமும் இழந்து வருகிறது.”
செல்வராகவன் அவர்களின் பேட்டி சினிமா உலகில் உள்ள பிரச்சினைகளை நன்றாக எடுத்துரைக்கிறது. பான் இந்தியா கனவுகள் பின்புலத்தில் கலைத்தரம் மறைந்து வருகிறது என்பது அவரின் கருத்து. படங்களின் தரமான வளர்ச்சிக்கு பதிலாக, வேகமான வசூல் குறிக்கோள்களே முக்கியமாகி விட்டன. மக்கள் சினிமாவை அனுபவிப்பதற்கு பதில், அது வேக உணவாக மாறிவிட்டது. தரமான சினிமா எங்கே போயிற்று? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?
செல்வராகவனின் பேட்டி மிகவும் சிந்திக்க வைக்கிறது. பான் இந்தியா படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவின் தரத்தை குறைத்துள்ளது என்பது உண்மை. கலைநயம் மற்றும் கதையம்சம் இல்லாமல், மாஸ் காட்சிகளால் நிரப்பப்படும் படங்கள் மக்களை ஈர்க்கவில்லை. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு கலை. பான் இந்தியா படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவின் தனித்துவத்தை எப்படி பாதிக்கிறது? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?