Skip to content
Movies

மீண்டும் இணைகிறார்கள் தனுஷ் – மாரி செல்வராஜ்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கர்ணன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த கூட்டணியின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளத்தில், “கர்ணன் படத்திற்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. அந்த படம் வெளியாகி இன்று நான்கு வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் தருணத்தில், மீண்டும் தனுஷ் உடன் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி […]

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கர்ணன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த கூட்டணியின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளத்தில்,

“கர்ணன் படத்திற்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. அந்த படம் வெளியாகி இன்று நான்கு வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் தருணத்தில், மீண்டும் தனுஷ் உடன் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முயற்சியில், முதன்முறையாக ஐசரி கணேஷ் சாருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ‘பேர் யுத்தம்’ தனது வேறுபட்ட பாதையில் பயணத்தை தொடங்குகிறது” என்றார்.

🔗 இதையும் படிக்க: தனுஷ்- நயன்தாரா வழக்கு விசாரணை

இந்த புதிய படம் தற்போது ‘தனுஷ் 56’ என அழைக்கப்படுகிறது. இது மாரி செல்வராஜின் ஆறாவது திரைப்படமாக இருக்கும். இதற்கு முன்னர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி, அடுத்ததாக ‘பைசன்’ படத்தையும் உருவாக்கி வருகிறார்.

Join in Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *